பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Friday, August 3, 2012

நான் ஒரு ஆத்மா


நான் ஒரு ஆத்மா என்றதை உணர்ந்த ஒவ்வொருவரும் நம்மை படைத்த பரமாத்மா-வுடன் தொடர்பு கொள்ளும் வழிமுறையை அறிந்து கொள்வது அவசியம். எப்பொழுது நாம் அழிவற்ற ஆத்மா என்றும், நாம் தாங்கி வந்துள்ள உடல் பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்டது, அது மீண்டும் பஞ்சபூதங்களுடன் ஒடுங்கிவிடும், அதாவது காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் மற்றும் மண்ணிலிருந்து வந்த இந்த உடல் மீண்டும் மண்ணுடன் கலந்துவிடும், என்பதனை புரிந்துகொண்டு, எடுத்த இந்த பிறவியிலாவது இந்த உடலை கருவியாக பயன் படுத்தி பரமாத்மாவுடன் இந்த ஜீவாத்மா இணைய வேண்டும். 
விட்டுவிடப் போகுது உயிர் விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் – பட்டினத்தார்

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்
சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களே. திருமூலர்.

இவ்வாரு மண்ணோடு மண்ணாக போகும் இந்த தேகத்தை தீய பழக்கவழக்கங்களால் பாழாக்காமல், நற் சிந்தனைகளால் நமது மனத்தினை பழக்கி, ஒரு நிலைப் படுத்தி ஆழ்ந்த தியானத்தில் அனுதினமும் ஈடுபட்டு பரமாத்மாவை அறிய வேண்டும். அவருடன் இணையவேண்டும்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. – திருமூலர். 



No comments: