பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Tuesday, June 25, 2013

ஸ்ரீ திருச்சிற்றம்பல சுவாமிகள்

ஸ்ரீ போகர் உலகிற்கு தந்த சற்குருமார்களில் சுவாமி சிவானந்த பரமஹம்சரும் ஒருவர். சித்தவேதம்  என்னும் அறிய படைப்பின் மூலம் தன் குருநாதர் உபதேசித்த சாகாக்கலையாம் வாசி யோகத்தின் ஆதி சூட்சமங்களை மாந்தர் கடைதேருவதர்காக உபதேசித்து வந்தார்.
இத்தகைய சிவஞான குருவின் சிவயோக சீடராய் பரிமளித்தவரே              ஸ்ரீ திருசிற்றம்பல சுவாமிகள். சிவயோகத்தின் பல்வேறு நிலைகளை கடந்து சகஜநிலை சமாதியில் பல வருடங்களாய் எளிமையுடனும் அடக்கத்துடனும் தம்மை சற்றேனும் வெளிக்காட்டாமல் உலக நன்மைக்காக சமீப காலம் வரை வாழ்ந்த உத்தம மகா யோகி. இத்தகைய யோகியை  ஸ்ரீ அகஸ்தியர் பெருமான் வெள்ளை ஆடை சித்தன்  என்னும் திருநாமம் கொண்டு மகிழ்வுடன் அழைத்திடுவார் .
தான் வாழ்ந்த 108 வருடங்களில் பிரம்மச்சரிய தவத்தை ஏற்று பிரம்மஞானியாக வாழ்ந்த பரோபகார காருண்யா சித்தர்.

 சுவாமிகளின் சமாதி கோவில் மற்றும் அங்குள்ள சிவலிங்கமும் அவராலேயே நிர்மாணிக்கப்பட்டது. அன்னதானம் , வஸ்திரதானம் , ஆலயதிருபணிகளும், ஏழை எளியவர்களுக்கு உண்டான மருத்துவ சேவைகளும் மிக எளிமையாக செய்துகொண்டிருந்தார்.
      
இத்தகைய மகயோகியான சுவாமிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு கார்த்த்கை மாதம் மூல நட்சத்திரத்தில் மகாசமாதி அடைந்தார்.


இந்தியாவிலேயே பெரிதும், மிகவும் அரிதான சக்தி வாய்ந்த                  சிதம்பர சக்கரமும் , திரு அம்பலக்கூரையும் ஒருங்கே அமையப்பெற்ற சித்தரின் ஜீவ சமாதியே திருசிற்றம்பல சுவாமிகளின் ஜீவாலயம்.

ஸ்ரீ சிற்றம்பல சுவாமிகள் ஜீவாலயம்

பாலக்காடு மெயின் ரோடு ,

அப்புபிள்ளையூர்,கொழிஞ்சாம்பாறை ,

பாலக்காடு ,கேரளா .