பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Friday, August 3, 2012

கர்மா


ஆத்மாவானது தனது உடலின் வாயிலாக செயல்பட்டு வருவதையே கர்மா என்கிறோம். நாம் உடலினை பயன்படுத்தி பலவகையான செயல்களை செய்கிறோம். அதாவது,நடப்பது,சுவாசிப்பது,காண்பது, பேசுவது,தொடுவது போன்றவை. இவைகள் அனத்துமே செயல்கள்
( கர்மாக்கள் ) ஆகும்.
நமது மனோபாவம், எண்ணம்,குணநலன்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப நமது செயல்கள் அமையும். இந்த செயல்களுக்கு நாம்தான் முழு பொறுப்பு. இந்த செயல்களினாலேயே நல்லது, கெட்டது என்ற கர்மாக்களை சேர்த்துக் கொள்கிறோம். கர்ம வினைகளுக்கு ஏற்ப இன்பமும், துன்பமும் இந்த ஆத்மா அடைகிறது. தேக உணர்விலிருந்து செயலாற்றி வருவதை விட்டுவிட்டு, ஆத்மாவை அறிந்து ஆத்ம உணர்வுடன் செயலாற்றினால் கர்மாவை குறைக்க முடியும்.

No comments: