பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Monday, January 13, 2014

இந்துக்கள் ஏன் வணக்கம் சொல்கிறார்கள்

வணக்கம் பற்றிய கருத்து
..............................................
  இந்துக்கள் நண்பர்களையோ மற்றவர்களை முதலில் சந்திக்கும் போது வணக்கம் என்று சொல்வது வழக்கம்.... 

ஏன் வணக்கம் சொல்கிறார்கள்?...இந்து மதத்தின் தத்துவத்தின் படி அனைத்து மனிதருக்குள்ளும் அந்த ஒரே இறைவனே ஆன்மாவாக குடிகொண்டிருக்கிறான் என்பது வேதவாக்கு.... 

அனைத்து மனிதர்களையும் வணங்குவதன் மூலம் அவன் அந்த ஒரே இறைவனையே வணங்குகிறார்......... 

ஆகவே இந்துக்களே நாம் வணங்குவோம்....அனைவரின் இதயத்திலும் ஆன்மாவாக வீற்றிருக்கும் அந்த ஒரே இறைவனையே வணங்குவோம்.

இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்!! 

3.4எந்த ப்ரம்மம் அனைத்து உயிரினங்களாக விளங்குகிறதோ அதுவே இந்த ஆத்மா. 

இவ்விதம் அறிகின்ற ஞானி பேச்சற்றவன் ஆகிறான்.இவன் தன்னிடத்தில் மகிழ்ந்திருக்கிறான்

9.அந்த ஒரே இறைவனே அனைவரின் இதயத்திலும் ஆன்மாவாக இருக்கிறார் - அதர்வ வேதம்……

.2.10 மாசற்ற உடலற்ற ப்ரம்மம் மேலான ஒளி பொருந்திய இருப்பிடமாகிய மனத்தில் உள்ளது. அந்த ப்ரம்மம் துாய்மையானது. எது ஒளிக்கெல்லாம் ஒளியாய் உள்ளதோ அந்த ப்ரம்மத்தை ஆத்மாவை அறிந்தவர்கள் அனைத்தையும் அறிகிறார்கள். - அதர்வ வேதம்…….முண்டக உபநிடதம் 

1.3.12.எல்லா உயிரினங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்ற இந்த ஆத்மா தெளிவாக விளங்குவதில்லை.கூர்மையான,நுட்பமான புத்தியின் மூலம் நுண்ணிய பார்வை உடையவர்களால் இந்த அத்மா அறியப்படுகிறது.!  -  யஜுர்வேதம்……கட உபநிடதம்

மூச்சுக் கலை - "சரம் பார்த்தல்"



 
"இடகலை", "பிங்கலை", "சுழுமுனை" என மூன்று முக்கியமான நாடிகளை பார்த்தோம். இவை மூன்றும் சுவாச ஓட்டத்தின் பெயர்களே!

மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு "சந்திரகலை" என்றொரு பெயரும் உண்டு. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு சூரிய கலை என்றொரு பெயரும் உண்டு.

இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.

இதையே சர ஓட்டம் என்பர். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.

இந்த சுவாச நடை தொடர் இடைவெளிகளில் மாறும் தன்மை உடையது என சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அதாவது ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் சூரியகலை அல்லது பிங்கலை அல்லது வலது நாசியில் சுவாசம் நடைபெற வேண்டுமாம். அதைப் போலவே திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சந்திரகலை அல்லது இடகலை அல்லது இடது நாசியில் சுவாசம் நடை வேண்டுமாம்.

வளர் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் இடகலையும், தேய் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் பிங்கலை சுவாசமும் நடக்க வேண்டும் என்கின்றனர். இதன்படி சுவாசம் நடைபெற்று வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்குமாம். இதில் ஏதேனும் மாறுதல் வரும் போது உடல்நலம் கெடுகிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள். 

திங்கள், புதன், வெள்ளிக் கிழமையில் ஓடவேண்டிய இடகலை சுவாசத்திற்கு பதிலாக பிங் கலை சுவாசம் ஓடினால் முறையே ஜலதோஷம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகுமாம்.

ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் ஓட வேண்டிய பிங்கலை சுவாசத்திற்கு பதில் இடகலை சுவாசம் ஓடினால் முறையே இருமல், காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு உண்டாகுமாம்.

இதன் அடிப்படையில்தான் வைத்தியர்கள் மருந்தினை தீர்மானிக்கும் முறை கூட இருந்தது. மருத்துவம் என்றில்லாமல் வாழ்வின் பிற செயல்களும் இந்த சர ஓட்டத்தினை வைத்தே தீர்மானிக்கப் பட்டது. இதனையே சரம் பார்த்தல் என கூறுவர். சரம் பார்த்தல் என்பது முற்காலத்தில் ஒரு வாழ்வியல் கூறாகவே இருந்திருக்கிறது. காலவோட்டத்தில் நாம் மறந்தே விட்டோம் என்பது வருத்தமான ஒன்று.