பதிவுகளை படிக்க வந்தமைக்கு - நன்றி.

Monday, January 13, 2014

இந்துக்கள் ஏன் வணக்கம் சொல்கிறார்கள்

வணக்கம் பற்றிய கருத்து
..............................................
  இந்துக்கள் நண்பர்களையோ மற்றவர்களை முதலில் சந்திக்கும் போது வணக்கம் என்று சொல்வது வழக்கம்.... 

ஏன் வணக்கம் சொல்கிறார்கள்?...இந்து மதத்தின் தத்துவத்தின் படி அனைத்து மனிதருக்குள்ளும் அந்த ஒரே இறைவனே ஆன்மாவாக குடிகொண்டிருக்கிறான் என்பது வேதவாக்கு.... 

அனைத்து மனிதர்களையும் வணங்குவதன் மூலம் அவன் அந்த ஒரே இறைவனையே வணங்குகிறார்......... 

ஆகவே இந்துக்களே நாம் வணங்குவோம்....அனைவரின் இதயத்திலும் ஆன்மாவாக வீற்றிருக்கும் அந்த ஒரே இறைவனையே வணங்குவோம்.

இறைவனே அனைத்து உயிர்களாகவும் ஆகியிருக்கிறார்!! 

3.4எந்த ப்ரம்மம் அனைத்து உயிரினங்களாக விளங்குகிறதோ அதுவே இந்த ஆத்மா. 

இவ்விதம் அறிகின்ற ஞானி பேச்சற்றவன் ஆகிறான்.இவன் தன்னிடத்தில் மகிழ்ந்திருக்கிறான்

9.அந்த ஒரே இறைவனே அனைவரின் இதயத்திலும் ஆன்மாவாக இருக்கிறார் - அதர்வ வேதம்……

.2.10 மாசற்ற உடலற்ற ப்ரம்மம் மேலான ஒளி பொருந்திய இருப்பிடமாகிய மனத்தில் உள்ளது. அந்த ப்ரம்மம் துாய்மையானது. எது ஒளிக்கெல்லாம் ஒளியாய் உள்ளதோ அந்த ப்ரம்மத்தை ஆத்மாவை அறிந்தவர்கள் அனைத்தையும் அறிகிறார்கள். - அதர்வ வேதம்…….முண்டக உபநிடதம் 

1.3.12.எல்லா உயிரினங்களுக்குள்ளும் மறைந்திருக்கின்ற இந்த ஆத்மா தெளிவாக விளங்குவதில்லை.கூர்மையான,நுட்பமான புத்தியின் மூலம் நுண்ணிய பார்வை உடையவர்களால் இந்த அத்மா அறியப்படுகிறது.!  -  யஜுர்வேதம்……கட உபநிடதம்

No comments: